"முகேஷ் அம்பானி இங்கிலாந்தில் குடியேறப் போவதில்லை" - ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கம்

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி, குடும்பத்தினருடன் இங்கிலாந்தில் குடியேறப் போவதாக வெளியான தகவல் தவறானது என ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்து உள்ளது.
முகேஷ் அம்பானி இங்கிலாந்தில் குடியேறப் போவதில்லை - ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கம்
x
முகேஷ் அம்பானி, இங்கிலாந்தில் சமீபத்தில் வாங்கிய 300 ஏக்கர் சொகுசு பங்களாவில் குடும்பத்தினருடன் குடியேறப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளது. இந்த தகவல் முற்றிலும் தவறானது என்றும் அடிப்படை ஆதாரமற்றது என்றும் அந்நிறுவனம் கூறி உள்ளது. வணிக நோக்கிலே சொகுசு பங்களா வாங்கப்பட்டு இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்