மேற்குவங்கத்தில் பட்டாசு வெடிக்க, விற்க தடை - கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு

மேற்கு வங்கத்தில் பட்டாசு வெடிக்கவும், விற்கவும் தடை விதித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
மேற்குவங்கத்தில் பட்டாசு வெடிக்க, விற்க தடை -  கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு
x
சுற்றுச்சூழல் ஆர்வலர் தொடர்ந்த வழக்கில், மேற்குவங்கத்தில் தீபாவளி, குருநானக் ஜெயந்தி, கிறிஸ்துமஸ், புத்தாண்டின் போது பட்டாசுகளை வெடிக்கவும், விற்கவும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், அஜய் ரஸ்தோகி அமர்வில் இன்று விசாரிக்கப்படுகிறது.  


Next Story

மேலும் செய்திகள்