விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்திய பேரணி - மசூதி, கடைகள் மற்றும் வீடுகள் சேதம்

திரிபுரா மாநிலத்தில் பனிசாகர் பகுதியில் விஸ்வ ஹிந்து பரிஷத் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையால் ஒரு மசூதி, கடைகள் மற்றும் வீடுகள் சேதப்படுத்தப்பட்டது.
விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்திய பேரணி - மசூதி, கடைகள் மற்றும் வீடுகள் சேதம்
x
திரிபுரா மாநிலத்தில் பனிசாகர் பகுதியில் விஸ்வ ஹிந்து பரிஷத்  பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையால் ஒரு மசூதி, கடைகள் மற்றும் வீடுகள் சேதப்படுத்தப்பட்டது. வங்கதேசத்தில் துர்கா பூஜையின் போது இந்துக்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விஷ்வ ஹிந்து பரிஷத்  நடத்திய பேரணியின் போது வன்முறை ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். வன்முறையை எதிர்த்து தொடரப்பட்ட பேரணி வன்முறையிலேயே முடிந்தது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், விஎச்பி-யினர் மசூதியின் மீது கற்களை எரிந்து வன்முறையில் ஈடுபட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. சமூக வலைதளங்களில் இது குறித்து பரப்பப்பட்ட பல செய்திகள் தவறானது எனவும், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், போலீசார் தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்