பெண்ணின் வயிற்றிலிருந்து ஒன்றரை கிலோ தலைமுடி அகற்றம்

கர்நாடகா மாநிலம் குடகு பகுதியில் வயிற்றுவலியால் அவதிப்பட்ட பெண்ணின் வயிற்றுக்குள் இருந்து ஒன்றரை கிலோ தலைமுடியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளனர்.
பெண்ணின் வயிற்றிலிருந்து ஒன்றரை கிலோ தலைமுடி அகற்றம்
x
கர்நாடகா மாநிலம் குடகு பகுதியில் வயிற்றுவலியால் அவதிப்பட்ட பெண்ணின் வயிற்றுக்குள் இருந்து ஒன்றரை கிலோ தலைமுடியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளனர்.

மடிக்கேரியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற அவரின் வயிற்றுப்பகுதியை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அப்போது அவரது வயிற்றுக்குள் கட்டி போன்ற பொருள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து, அந்தப் பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவரது உடலில் இருந்தது கட்டி இல்லை எனவும் அது தலை முடி என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் வயிற்றில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ தலைமுடியை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர். இந்த தலைமுடிகள் அவர் உணவு உண்ணும் போது வயிற்றுக்குள் சென்றிருக்கலாம் எனவும் அல்லது அவருக்கு தலைமுடியை உண்ணும் பழக்கம் இருந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்