முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வுக்கு தடை

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது
முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வுக்கு தடை
x
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தர், முதுநிலை பல் மருத்துவக் கல்விக்கான கலந்தாய்வு அக்டோபர் 24ல் தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டதாக கூறினார். இதைக் கேட்ட நீதிபதிகள், இதர பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான மத்திய அரசின் இடஒதுக்கீடுக்கு எதிரான மனுக்களை விசாரிக்கும் வரை, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை தொடங்கக்கூடாது என உத்தரவிட்டனர். 8 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் என்ற உச்ச வரம்பு சம மற்றவர்களை சம மாக்குவதாகவுள்ளது என கடந்த 20-ந் தேதி கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பான மனுக்களை வரும் 28ஆம் தேதி மீண்டும் விசாரிக்க உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்