மாணவர் தேர்தலில் இரு மாணவர் சங்கங்கள் இடையே மோதல் - 3 மாணவர்கள் கைது
கேரளா மாநிலம் கோட்டயத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற மாணவர் தேர்தலில் இரு மாணவர் சங்கங்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் கோட்டயத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற மாணவர் தேர்தலில் இரு மாணவர் சங்கங்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கோட்டயத்தில் உள்ள எம்.ஜி. கல்லூரியில் நடந்த மாணவர் தேர்தலில் எஸ்.எஃப்.ஐ ( SFI ) மற்றும் ஏ.ஐ.எஸ்.எஃப்(AISF ) மாணவர் சங்கங்கள் இடையே வாக்கு சேகரிப்பின் போது மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஏ.ஐ.எஸ்.எஃப்(AISF ) மாணவர்கள் மீது எஸ்.எஃப்.ஐ.( SFI ) மாணவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இது தொடர்பாக எஸ்.எஃப்.ஐ.( SFI ) மாணவர் சங்கத்தை சேர்ந்த 3 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
Next Story