மத்திய அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசாக 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு
x
மத்திய அரசு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசாக 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வின் மூலம் சுமார் 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த உயர்வின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 9 ஆயிரத்து 488 கோடியே 70 லட்சம் கூடுதல் செலவாகும். இதன் உயர்வின் மூலம் மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 28% இருந்து 31% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. 




Next Story

மேலும் செய்திகள்