ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் குறித்து அவதூறு - மாநிலம் முழுவதும் தெலுங்குதேச அலுவலகங்கள் சூறை
ஆந்திராவில் தெலுங்குதேச கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.
ஆந்திராவில் தெலுங்குதேச கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் குறித்து தெலுங்கு தேசம் கட்சியின் செய்தி தொடர்பாளர் பட்டாபி ராம் அவதூறாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள தெலுங்கு தேச கட்சி அலுவலகங்கள், கட்சியின் முக்கிய தலைவர்களின் வீடுகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு கட்சி தலைமை அலுவலகத்தில் உண்ணாவிரதப் போரட்டம் நடத்தினார். சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
Next Story