சிறையில் உள்ள ஷாருக்கான் மகன் - சிறையில் வைத்து மகனை சந்தித்த ஷாருக்கான்

போதை பொருள் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தனது மகன் ஆர்யன் கானுடன் நடிகர் ஷாருக்கான் நேரில் சந்தித்தார்.
சிறையில் உள்ள ஷாருக்கான் மகன் - சிறையில் வைத்து மகனை சந்தித்த ஷாருக்கான்
x
போதை பொருள் விவகாரம் தொடர்பாக கடந்த மூன்றாம் தேதி சொகுசு கப்பலில் வைத்து பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தற்போது மும்பை ஆர்தர் சாலை சிறையில் உள்ள மகன் ஆர்யன் கானுக்கு தொடர்ந்து ஜாமின் மறுக்கப்பட்டதை அடுத்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆர்யன் கான் தரப்பில் ஜாமின் கேட்டு நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனை இன்று காலை நடிகர் ஷாருக்கான் நேரில் சந்தித்தார். சுமார் 20 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பு நடைபெற்றது. முன்னதாக தனது பெற்றோருடன் வீடியோ காலில் பேச ஆர்யன் கான் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 8 ஆம் தேதி முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன் கானின் போலீஸ் காவல் இன்றுடன் முடிகிறது. 


Next Story

மேலும் செய்திகள்