பிலிஃபிட் பகுதியில் வெள்ளப்பெருக்கு - சிக்கித் தவித்த மக்கள்
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிஃபிட் பகுதியில் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்தவர்களை ஹெலிகாப்டர்கள் மூலமாக இந்திய விமானப் படையினர் காப்பாற்றினர்.
உத்தரகாண்ட் மாநிலத்தை கனமழை புரட்டிப் போட்ட நிலையில், 40க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், ஏராளமான பரப்பிலான விவசாய நிலங்கள் நீரில் முழ்கின. வீடுகள் பலத்த சேதமடைந்தன. இந்நிலையில், அதன் எல்லையில் உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிலிஃபிட் நகரில் மக்கள் வெள்ள நீரில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த விமானப் படையினர், மக்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களை மீட்டுச் சென்றனர்.
Next Story