அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா நடமாட்டம் - ஆயுதங்களை குவித்து வைத்துள்ள இந்திய ராணுவம்

அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப்பகுதியில் சீனாவின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் இந்திய ராணுவம் போஃபர்ஸ் பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களை தயார் நிலையில் வைத்துள்ளது.
அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா நடமாட்டம் - ஆயுதங்களை குவித்து வைத்துள்ள இந்திய ராணுவம்
x
அருணாச்சல பிரதேசத்தின் எல்லையை ஒட்டிய பகுதிகளில் சீனா, ராணுவ போக்குவரத்துக்கான சாலைகள், முகாம்கள், ராணுவ தளங்கள் போன்றவற்றையும் அமைத்து வருகிறது. இதற்கு பதிலடி தரும் வகையில், அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் இந்திய ராணுவம் அதிநவீன ஆயுதங்களை குவித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா - சீனா இடையே 1,300 கிமீ எல்லை உள்ளது. இதை பாதுகாக்கும் வகையில் 
ரபேல் போர் விமானங்கள், ஆகாஷ் ஏவுகணை, போஃபர்ஸ் பீரங்கிகள், 300 கிமீ வரை சென்று தாக்கும் ஏவுகணைகள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இரு நாட்டு ராணுவமும் இம்மாநில எல்லையில் குவிக்கப்பட்டு இருப்பதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்