ஒரே மாதத்தில் 2 வது முறையாக பிரியங்கா காந்தி கைது

உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரே மாதத்தில் 2 வது முறையாக பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரே மாதத்தில் 2 வது முறையாக பிரியங்கா காந்தி கைது
x
உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில், விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட போது குடும்பத்தை சந்திக்க சென்ற போது பிரியங்கா கைது செய்யப்பட்டார். இதனையடுத்து உத்தரபிரதேசத்தில் திருட்டு வழக்கில் போலீசார் விசாரணையில், இறந்து போன துப்புரவு தொழிலாளியின் குடும்பத்தினரை சந்திக்க ஆக்ரா நோக்கி வந்த பிரியங்கா காந்தியின் வாகனத்தை முதலாவது சுங்க சாவடியில் போலீசார் தடுத்தி நிறுதியுள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்திக்க எந்த அரசியல் தலைவர்களுக்கும் அனுமதி இல்லை என, போலீசார் தெரிவித்தனர். ஆனாலும், பிரியங்கா காந்தி இறந்த ஒருவரின் வீட்டுக்கு செல்வது எப்படி சட்டம் -ஒழுங்கு பிரச்சனையை உண்டாக்கும் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்ததோடு பிரியங்கா காந்தியையும் கைது செய்தனர்.



Next Story

மேலும் செய்திகள்