ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்க மும்பை சிறப்பு நீதிமன்றம் மறுப்பு
போதைப் பொருள் பயன்பாடு வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்க மும்பை சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
போதைப் பொருள் பயன்பாடு வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்க மும்பை சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நடுக்கடலில் நடந்த போதை விருந்தில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் பங்கேற்றது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆர்யன்கான், உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்த வழக்கில் சிறையில் உள்ள ஆர்யன் கானின் ஜாமின் மனு மீதான விசாரணை அக்டோபர் 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை இன்று விசாரித்த மும்பை நீதிமன்றம், ஆர்யன் கான் உள்ளிட்டோருக்கு ஜாமின் தர மறுப்புத் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Next Story