"33 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு" - முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் 33 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
33 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு - முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தல்
x
கேரளாவில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், கோட்டயம் மாவட்டத்தில் 33 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. மேலும், கூட்டிக்கல், தலைநாடு, திக்கோய், பூஞ்ஞார், நெடுபாகம் கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் முகாம்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், முகாம்களில் தொற்று பரவாமல் இருக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், முகாம்களில் உள்ள ஊழியர்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்