"பட்டா மாற்றத்திற்கு லஞ்சம் கேட்ட விஏஓ" - மனமுடைந்து பூ வியாபாரி தற்கொலை

ஆரணி அருகே பட்டா மாற்றுதலுக்கு கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டு அலைக்கழித்ததாக பூ வியாபாரி பேஸ்புக்கில் வீடியோ பகிர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி குறித்து விரிவாக பார்ப்போம்.
பட்டா மாற்றத்திற்கு லஞ்சம் கேட்ட விஏஓ - மனமுடைந்து பூ வியாபாரி தற்கொலை
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பூ வியாபாரி பிரபு.

இவர் தந்தை பெயரில் உள்ள பூர்வீக சொத்தை, சகோதரர்கள் இருவருடன் பங்கீட்டு கொள்ள கிராம நிர்வாக அலுவலரை அணுகியதாக கூறப்படுகிறது.

ஆனால் கிராம நிர்வாக அலுவலர் பட்டா பிரித்து வழங்குவதற்கு 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும், இதற்காக ஒரு மாத காலமாக அலைகழித்து வந்ததாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்