வெள்ளத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம் - உரிமத்தை ரத்து செய்யும் நடைமுறை தொடக்கம்
மழை வெள்ளத்தில் ஆபத்தான முறையில் பேருந்தை இயக்கிய கேரள ஓட்டுநரின் உரிமத்தை ரத்துசெய்யும் நடைமுறையை மோட்டார் வாகனத் துறையினர் தொடங்கி உள்ளனர்.
கோட்டயம் அருகே பூஞ்ஞாரில், ஜெயதீப் என்ற ஓட்டுநர் வெள்ளத்தில் பேருந்தை இயக்கினார். தொடர்ந்து அவரை கேரள அரசு பணியிடை நீக்கம் செய்தது. இந்நிலையில், மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 184 -ன் கீழ், அவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் நடைமுறைகள் தொடங்கப்பட்டு உள்ளன.
Next Story