தெலுங்கு தேசம் அலுவலகங்கள் சூறை - அடித்து நொறுக்கிய ஆளுங்கட்சியினர்
ஆந்திராவில் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் கட்சி அலுவலகங்களை ஆளுங்கட்சியினர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள மங்களகிரி பகுதியில் தெலுங்கு தேச கட்சியின் தலைமை அலுவலகம் மீது ஆளும் ஒய்எஸ்ஆர் கங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இதில் அலுவலகத்தில் உள்ள கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டது. தனியார் தொலைக்காட்சியில் தெலுங்கு தேச கட்சியின் செய்தி பிரிவிலுள்ள பட்டாபி என்பவர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அப்போது அவர் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதால் ஆத்திரம் அடைந்த ஆளுங்கட்சியினர் ரகளையில் ஈடுபட்டனர்.
மங்களகிரியிலுள்ள தெலுங்கு தேச கட்சியின் தலைமை இடத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். மேலும் எதிர்க்கட்சி தரப்பாக பேசிய பட்டாபி வீட்டிலும் ஆளுங்கட்சியினர் நுழைந்து வீட்டிலுள்ள பொருள்களை உடைத்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.
Next Story