சிறுமிக்கு பாலியல் தொல்லை புகார் - காவலர் மீது போக்சோவில் வழக்கு

புதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை புகார் - காவலர் மீது போக்சோவில் வழக்கு
x
புதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

புதுச்சேரியை அடுத்த நல்லாவாடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல். இவர் ஐ.ஆர்.பி.என் பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற போது அவரின் 12 வயதான மகளிடம் குமரவேல் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனை அந்த சிறுமி வெளிநாட்டில் உள்ள தன் தந்தையிடம் கூறவே, அவர் உடனே குழந்தைகள் நல வாரியத்தில் தெரிவித்தார். இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், காவலர் குமரவேல் மற்றும் சிறுமியின் தாய் ஆகியோர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சிறுமியின் தாய் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான காவலர் குமரவேலை போலீசார் தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்