ஆந்திராவில் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த பெண் தீவிரவாதி போலீசில் சரண்

ஆந்திராவில் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த பெண் தீவிரவாதி, ஆயுதங்களுடன் போலீசாரிடம் சரணடைந்தார்.
ஆந்திராவில் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த பெண் தீவிரவாதி போலீசில் சரண்
x
ஆந்திராவில் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த பெண் தீவிரவாதி, ஆயுதங்களுடன் போலீசாரிடம் சரணடைந்தார். 

விசாகப்பட்டினத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பில் இருந்து ஸ்வேதா என்ற பெண் தீவிரவாதி வெளியேறி உள்ளார். அவர், விசாகப்பட்டினம் காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணாராவ் முன்னிலையில் போலீசாரிடம் சரணடைந்தார். துப்பாக்கி, தோட்டா உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீசாரிடம் அவர் ஒப்படைத்து உள்ளார். மாவோயிஸ்ட் இயக்க தலைவர்களில் ஒருவரான ராமகிருஷ்ணன் என்பவர் இறந்ததைத் தொடர்ந்து, தான் சரணடைந்து இருப்பதாக அவர் கூறி உள்ளார். சரணடைந்துள்ள ஸ்வேதா மீது ஆறு கொலை வழக்குகள் உள்பட 46 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், இவரை பிடித்துக் கொடுத்தால் 4 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என ஆந்திர போலீசார் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்