புனே விமான நிலைய ஒடுபாதை சீரமைப்பு பணி : கொரோனா தடுப்பூசிகள் கிடைப்பதில் தாமதம்? - அதிகாரிகள் விளக்கம்

புனே விமான நிலைய ஒடுபாதை சீரமைப்பு பணியால் கொரோனா தடுப்பூசிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுமோ என்ற சந்தேகம் எழுந்த நிலையில், தடையில்லாமல் தடுப்பூசி கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புனே விமான நிலைய ஒடுபாதை சீரமைப்பு பணி : கொரோனா தடுப்பூசிகள் கிடைப்பதில் தாமதம்? - அதிகாரிகள் விளக்கம்
x
புனே விமான நிலைய ஒடுபாதை சீரமைப்பு பணியால் கொரோனா தடுப்பூசிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுமோ என்ற சந்தேகம் எழுந்த நிலையில், தடையில்லாமல் தடுப்பூசி கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 15ம் தேதி வரை தமிழகத்திற்கு புனேவில் இருந்து கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தடைந்தன. ஆனால், புனே விமான நிலையத்தில் 16ம் தேதி முதல் 29ம் தேதி வரை, ஓடுபாதை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால், விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிட்ஷீல்டு தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு அனுப்புவதில் சிரமம் ஏற்படலாம் என்று கூரப்பட்ட நிலையில்,  கொரோனா தடுப்பூசிகளை புனேவில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும் பணியை இந்திய விமான படை கவனிக்கும் என்றும், இதனால் தடையில்லாமல் மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்