கனமழையால் மின் துறைக்கு ரூ.15.74 கோடி இழப்பு - கேரள மின்சார வாரியம் தகவல்
கேரளாவில் கனமழையால் மின்சாரத் துறைக்கு பதினைந்து கோடியே 74 லட்ச ரூபாய் இழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து லட்சத்து 20 ஆயிரம் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், 45 ஆயிரம் இணைப்புகள் இன்னும் மீட்கப்படவில்லை என மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர்க்கால அடிப்படையில் மீட்டமைக்கப்படும் என்று மின்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Next Story