கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை: 5 ஆவது முறையாக நீர் திறக்கப்பட உள்ளது

கேரளா மாநிலம் இடுக்கி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் செறுதோணி அணை 5 ஆவது முறையாக இன்று திறக்கப்பட உள்ளது.
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை: 5 ஆவது முறையாக நீர் திறக்கப்பட உள்ளது
x
 இடுக்கி மாவட்டத்தில் குறவன் மற்றும் குறத்தி ஆகிய மலைகளை இணைத்து ஆர்ச் வடிவில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக அணையின் நீர் மட்டமும் உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து 5 ஆவது முறையாக செறுதோணி அணை வழியாக இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதற்கு முன்பாக 1981, 1992 ஆகிய ஆண்டுகளில் தலா ஒரு முறையும் 2018 ஆம் ஆண்டில் 2 முறை என மொத்தமாக 4 முறைதான்  அணையில் இருந்து  தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்