கொட்டும் மழையில் ருசிகர திருமண நிகழ்வு... பாத்திரத்தில் பயணித்த இளம் ஜோடி
கேரளாவில் கொட்டும் மழைக்கு நடுவே நடந்த ருசிகர திருமண நிகழ்வை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
கேரளாவில் கொட்டும் மழைக்கு நடுவே நடந்த ருசிகர திருமண நிகழ்வை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
முன்பெல்லாம் திருமண நிகழ்வா ? அல்லது திருவிழா என்கிற அளவிற்கு ஊரே கூடி நடைபெற்ற திருமணங்களும் உண்டு...
இந்திய கலாச்சாரத்தில் ஒன்றிணைந்த திருமண நிகழ்வுகளில் காலப்போக்கில் ட்ரெண்டுக்கு ஏற்றவாறு பல்வேறு மாற்றங்கள் வர தொடங்கின...
பல லட்சம் செலவு செய்ய நிர்பந்திக்கும் ஆடம்பர திருமணம் நிகழ்வுகளுக்கு குட் பை சொல்ல வைத்துவிட்டது... இந்த கொரோனா
கொரோனா காலகட்டத்தில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் எளிமையாக திருமணம் செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது...
இந்த இக்கட்டான சூழலில்... நினைத்தப்படி திருமணத்தை நடத்தி கொள்ள முடியாவிட்டாலும்.... விரும்பி நிச்சயிக்கப்பட்ட தேதியில் திருமணத்தை நடத்தி முடிப்பதே பெரும் சவாலாவிட்டது...
அப்படி ஒரு நிகழ்வு தான் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மேல்குட்டநாட்டில் நடைபெற்றுள்ளது.
கொட்டும் மழையால் வெள்ளத்தில் ஒட்டுமொத்த கேரளாவும் வெள்ளத்தில் தத்தளிக்க... தங்கள் திருமண கனவை நிறைவேற்ற பெரிய சமையல் பாத்திரத்தில் பயணத்துள்ளது, இளம் ஜோடி ஒன்று...
ஐஸ்வர்யா மற்றும் ராகுல் என்ற தம்பதியருக்கு அங்குள்ள கோயிலில் திருமண நடைபெற இருந்த நிலையில், வெள்ளத்தில் கோயிலுக்கு எப்படி செல்வது என்ற கேள்வி எழுந்துள்ளது...
அவசரத்திற்கு படகு கிடைக்காததால்... திருமண சமையலுக்கு பயன்படுத்தும் பெரிய சமையல் பாத்திரத்தையே படகாக பயன்படுத்தப்பட்டது தான் இதில் ருசிகரம்..
பாத்திரத்தில் பயணித்து இருவரும் கோயில் வந்தடைய... இருவரும் தாங்கள் விரும்பிய வாறே திருமணம் பந்தத்தில் இணைந்துவிட்டனர்.
Next Story