முதல் டோஸ் போட்டு முடித்தது உத்தரகாண்ட் மாநிலம் - பிரதமர் பாராட்டு

உலக பெரும் தொற்றுக்கு எதிரான போரில் நமது தடுப்பூசி பிரச்சாரம் மிகச் சிறந்ததாக திகழப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
முதல் டோஸ் போட்டு முடித்தது உத்தரகாண்ட் மாநிலம் - பிரதமர் பாராட்டு
x
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முழுமையாக முதல் டோஸ் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹிமாச்சல் பிரதேஷ், கோவா உள்ளிட்ட மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் உள்ள தகுதியுள்ள அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி முடித்துள்ளனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி தேவ பூமியில் வாழும் மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனாவுக்கு எதிரான தேசத்தின் போரில் உத்தரகாண்டின்,  சாதனை மிக முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார்.  பெருந்தொற்றுக்கு எதிரான போரில் இந்தியாவின் தடுப்பூசி திட்டம் மிக சிறப்பானதாக திகழப் போகிறது என்கிற நம்பிக்கை தமக்கு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார். 




Next Story

மேலும் செய்திகள்