உ.பி.யில் பயங்கரம் : நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுட்டுக் கொலை
உத்திரபிரதேசத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷாஜஹான்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் போலீசாரும், வழக்கறிஞரும் இருந்தபோது திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. உடனடியாக சத்தம் வந்த 3வது மாடிக்கு சென்று பார்த்த போது, வழக்கறிஞர் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது அருகில் துப்பாக்கி ஒன்றும் இருந்துள்ளது. பூபேந்திர சிங் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர் இறப்பதற்கு முன்பு ஒருவருடன் பேசி கொண்டிருந்துள்ளார். அப்பொழுது தான் துப்பாக்கி சத்தம் கேட்டதாக நீதிமன்றத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர். பூபேந்திரனிடம் வழக்கறிஞர் பயிற்சி எடுத்து வந்த நபர் பேசி கொண்டிருந்ததாக அங்கிருந்த சிலர் கூறுகின்றனர். போலீசாரின் பாதுகாப்பு இருக்கும் நீதிமன்றத்தில் அரங்கேறிய கொலை அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story