பேக்கேஜிங் தொழிற்சாலையில் தீ விபத்து - இருவர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பேக்கேஜிங் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
பேக்கேஜிங் தொழிற்சாலையில் தீ விபத்து - இருவர் உயிரிழப்பு
x
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பேக்கேஜிங் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர். சூரத்தின் கடோதரா பகுதியில் தனியாருக்கு சொந்தமான பேக்கேஜிங் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இன்று அதிகாலை தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த பொருட்கள் கொளுந்து விட்டு எரிந்தன. சம்பவ இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்ததால் சிலருக்கு தீக்காயம் ஏற்பட, இருவர் உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், 125பேரை மீட்டனர். தொழிற்சாலையின் முதல் தளத்தில் பற்றிய தீ அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியதால் சிலர் மேலிருந்து கீழே குதித்து உயிரை காத்து கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்