உ.பி. வன்முறைக்கு விவசாயிகள் கண்டனம்: விவசாய சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம்

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தை கண்டித்து விவசாய சங்கங்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றன.
உ.பி. வன்முறைக்கு விவசாயிகள் கண்டனம்: விவசாய சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம்
x
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் நடத்திய பேரணி மீது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கார் மோதியதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதைதொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவம் என மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவிவிலக வலியுறுத்தி இன்று நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் அமைப்பு ஈடுபட்டு வருகின்றனர். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை போராட்டம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த போராட்டத்தின் போது ரயில்வே சொத்துக்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படாது என விவசாயிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்