கனமழை மற்றும் வெள்ளத்தால் தத்தளிக்கும் கேரளா - 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் வெள்ளத்தால் தத்தளிக்கும் கேரளா - 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
x
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க 105 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனிடையே அரபிக்கடலின் லட்சத்தீவு பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருவதால் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்