கொக்காயர் கிராமத்தில் வெள்ளம் - 2 வீடுகளை சேர்ந்த 8 பேர் மாயம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், கொக்காயர் என்ற பகுதியில், வெள்ளத்தில் 4 வீடுகள் அடித்து செல்லப்பட்டன.
கொக்காயர் கிராமத்தில் வெள்ளம் - 2 வீடுகளை சேர்ந்த 8 பேர் மாயம்
x
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், கொக்காயர் என்ற பகுதியில், வெள்ளத்தில் 4 வீடுகள் அடித்து செல்லப்பட்டன. இதில், இரண்டு வீடுகளை சேர்ந்த 8 பேர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தீயணைப்பு படையின் தலைமையில் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், என்.டி.ஆர்.எஃப் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. இந்நிலையில், ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்கள், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாவட்டத்தில் தற்போதுள்ள இரவு நேர பயண தடை 20 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்