கேரளாவில் மிக கனமழை எச்சரிக்கை - கேரளா விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு படை

கேரளாவில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தக்கோலத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை கேரளாவிற்கு விரைந்தது.
கேரளாவில் மிக கனமழை எச்சரிக்கை - கேரளா விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு படை
x
கனமழையால் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இந்நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு, தேசிய பேரிட மீட்பு படையின் உதவியை கேரள அரசு கோரியிருந்தது. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மேலாண்மை மையத்தில் இருந்து, 100 பேர் கொண்ட ஐந்து குழுக்கள் இடுக்கி, கொல்லம், கோட்டயம், பாலக்காடு, கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்