"அடுத்த 2 நாட்கள் சபரிமலைக்கு வர வேண்டாம்" - கேரள அரசு அறிவுறுத்தல்

சபரிமலையில் மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நிலையில், 2 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்குமாறு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.
அடுத்த 2 நாட்கள் சபரிமலைக்கு வர வேண்டாம் - கேரள அரசு அறிவுறுத்தல்
x
கேரளாவில் தொடரும் கனமழைக்கிடையே  ஏற்கனவே திட்டமிட்டபடி மாதாந்திர சபரிமலை சன்னிதானம் நடை மாலையில் திறக்கப்பட்டது. 
இன்று முதல் 5 நாட்கள் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,  தற்போது பத்தனம்திட்டா மாவட்டத்தில் சிவப்பு எச்சரிக்கை அமலில் உள்ளதால் இன்று மற்றும் நாளை சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய வர வேண்டாம் என கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் இரு நாட்கள் பக்தர்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  இதற்கிடையே கனமழை காரணமாக சபரிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள பம்பை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.


Next Story

மேலும் செய்திகள்