பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு: கார், பேருந்து ஆகிய வாகனங்கள் சிக்கி தவிப்பு

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு: கார், பேருந்து ஆகிய வாகனங்கள் சிக்கி தவிப்பு
x
இடுக்கி மாவட்டம் முண்டகாயம் - குட்டிக்கானம் வழித்தடத்தில், புல்லுபாரா என்ற இடத்தில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளதால், பேருந்து, கார்கள் உட்பட வாகனங்கள் சிக்கி தவித்து வருகின்றன. வாகனங்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பேருந்தில் சிக்கிய மக்கள், மாற்று வாகனத்தில் அழைத்து செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே கோடஞ்சேரி ஊராட்சியில் முண்டூர் பாலத்தில் வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில், அவற்றை அகற்றும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்