வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடுகள் - குட்டிக்கல் பகுதியில் 13 பேர் மாயம்

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம், குட்டிக்கல் பகுதியில், 3 வீடுகள் அடித்து செல்லப்பட்ட நிலையில், 6 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடுகள் - குட்டிக்கல் பகுதியில் 13 பேர் மாயம்
x
கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கோட்டயம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், குட்டிக்கல் பகுதியில் 3 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதில் 13 பேர் மாயமாகிய நிலையில், அவர்களில் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மீதமுள்ள 7 பேரையும் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, அப்பகுதியில் உள்ள பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், விமானப்படை மற்றும் ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்