வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார் - காரில் இருந்த ஆண், பெண் உயிரிழப்பு

கேரள மாநிலம் தொடுபுழா பகுதியில், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரில் இருந்த ஆண் மற்றும் பெண் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார் - காரில் இருந்த ஆண், பெண் உயிரிழப்பு
x
கேரள மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட தொடுபுழா பகுதியில், வெள்ளத்தில் மூழ்கிய காருக்குள் இருந்து ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. அந்த சடலத்தை மீட்கும் போது காருக்கு அருகே ஒரு ஆணின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், இருவரும் காரில் வந்த போது, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதும், காரில் இருந்து வெளியே முயற்சி செய்த போது உயிரிழந்ததும் தெரிய வந்தது. இதனிடையே காரை மீட்பது கடினமாக இருப்பதால், கார் கட்டப்பட்டு ஆற்றில் நிறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்