காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை - லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தளபதி பலி

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தளபதி உள்ளிட்ட 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை - லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தளபதி பலி
x
காஷ்மீரில் அண்மையில் பொதுமக்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 2 ஆசிரியர்கள் உள்ளிட்ட 7 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் வேட்டையாடி வருகின்றனர். இந்நிலையில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பாம்போர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த‌து. இதையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கிய தளபதி உமர் முஸ்தான் உள்ளிட்ட இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், ஆயுதங்கள் வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை 13 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்