துர்கா பூஜையில் எதிரொலிக்கும் கொரோனா பாதிப்பு: மருத்துவர், காவலரை பாராட்டும் துர்கா சிலை

பீகாரில் நடைபெற்ற துர்கா பூஜையில் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களை அம்மன் பாராட்டும் விதமாக சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
துர்கா பூஜையில் எதிரொலிக்கும் கொரோனா பாதிப்பு: மருத்துவர், காவலரை பாராட்டும் துர்கா சிலை
x
நவராத்திரி விழாவை ஒட்டி பாட்னாவில் நடைபெற்ற துர்கா பூஜையில்,   மருத்துவர், காவலர், தூய்மை பணியாளர்களின்  சேவையை பாராட்டி அவர்களின் தலையில் அம்மன் கிரீடம் வைப்பது போன்று சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள், தீயவைகளை வதம் செய்து மக்களை கடவுள் காப்பது போல், கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் பாராட்ட வேண்டியவர்கள் என்றனர். 


Next Story

மேலும் செய்திகள்