மீண்டும் காங். தலைவர் ஆவாரா ராகுல் காந்தி? - கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடுகிறது.
மீண்டும் காங். தலைவர் ஆவாரா ராகுல் காந்தி? - கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
x
நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். இதனையடுத்து சோனியா காந்தி இடைக்கால தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார். 
ஆனால், அவருடைய உடல்நிலை காரணமாக, அவரால் தீவிரமாக கட்சி பணியாற்ற முடியவில்லை. 
இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் தமது ​டிவிட்டர் பதிவில், டெல்லி அக்பர் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும் என கூறியுள்ளார். இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழல், எதிர்வரும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் அமைப்பு ரீதியான தேர்தல் குறித்து கலந்தாலோசிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்