பாம்பை விட்டு மனைவியை கொன்ற கணவன் - குற்றவாளியான கணவனுக்கு இரட்டை ஆயுள்
கேரளாவில் கொடிய விஷப்பாம்பை ஏவி மனைவியை கொடூரமாக கொலை செய்த சூரஜ்க்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.
2020 ஆம் ஆண்டு மனைவி உத்ரா மீது விஷப்பாம்பை ஏவி கொடூரமாக கொலை செய்த கணவர் சூரஜ் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கொல்லம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனிடையே 4 பிரிவுகளில் குற்றம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சூரஜை குற்றவாளி என அறிவித்தது நீதிமன்றம். இந்த சூழலில் இன்று சூரஜ்க்கு இரட்டை ஆயுள் தண்டனைகள் மற்றும் கூடுதலாக 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொலை, கொலை முயற்சி, தடயங்களை அழித்தல் ஆகிய குற்றங்களால் இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 5 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட நிலையில் அந்த தொகையானது உத்ராவின் குழந்தைக்கு வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்தது.
Next Story