"ஸ்வச் பாரத் நகர்ப்புற திட்டம் நீட்டிப்பு" - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நீடித்த பலன்களை பெற ஸ்வச் பாரத் நகர்புற திட்டத்தை 2025-26 வரை நீட்டித்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
திறந்தவெளி மலம் இல்லா நிலையின் நீடித்த பலன்களை பெறுவது, அனைத்து நகரங்களிலும் விஞ்ஞான அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை இலக்கை அடைவது போன்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு இந்த திட்டத்தை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்காக அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Next Story