ராகுல் தலைமையிலான காங்கிரஸ் குழு - நாளை குடியரசு தலைவருடன் சந்திப்பு

லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக நாளை குடியரசு தலைவரை ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழுவினர் சந்திக்கவுள்ளனர்
ராகுல் தலைமையிலான காங்கிரஸ் குழு - நாளை குடியரசு தலைவருடன் சந்திப்பு
x
லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கேசி வேணுகோபால் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் விவசாயிகள் மீது மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா கார் ஏற்றி கொன்றது தொடர்பாக வெளிப்படையான சாட்சிகள் இருந்த போது, இதுவரை உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால், உண்மை நிலவரங்களை வழங்க தங்களுக்கு அனுமதி வழங்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தார். தற்போது குடியரசுத் தலைவரிடமிருந்து அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 7 பேர் கொண்ட காங்கிரஸ் குழுவினர் நாளை குடியரசு தலைவரை நேரில் சந்தித்து மனு அளிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்