மத்திய அமைச்சர் மகனுக்கு போலீஸ் காவல் - 3 நாட்கள் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு

மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு 3 நாள் போலீஸ் காவல் வழங்கி, லக்கிம்பூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அமைச்சர் மகனுக்கு போலீஸ் காவல் - 3 நாட்கள் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு
x
மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு 3 நாள் போலீஸ் காவல் வழங்கி, லக்கிம்பூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில், விவசாயிகள் கூட்டத்தில் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் புகுந்து மோதியதில், விவசாயிகள் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக வன்முறை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஆஷிஷ் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஆஷிஷ் மிஸ்ராவை காவலில் வைத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல் செய்த நிலையில், நிபந்தனைகளுடன் 3 நாள் போலீஸ் காவல் வழங்கி, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்