பாம்பு கடித்து மனைவி இறந்த விவகாரம் - ரூ.10,000க்கு பாம்பு வாங்கி கடிக்க வைத்த கணவன் : 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு-விசாரணை

கேரளாவில், பாம்பை கடிக்க வைத்து உத்ரா என்ற பெண் கொல்லப்பட்ட வழக்கில், கணவன் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
பாம்பு கடித்து மனைவி இறந்த விவகாரம் - ரூ.10,000க்கு பாம்பு வாங்கி கடிக்க வைத்த கணவன் : 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு-விசாரணை
x
கொல்லம் மாவட்டம், அஞ்சல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் உத்ரா- சூரஜ் தம்பதிக்கு, ஒரு மகன் உள்ளார். கடந்த பிப்ரவரி இறுதியில், பறக்கோடு பகுதியில் உள்ள வீட்டில், பாம்பு கடித்து சிகிச்சைபெற்ற உத்ரா, தாய் வீட்டில் ஓய்வு எடுத்தார். 2020 மே, 6ஆம் தேதி மீண்டும் பாம்பு கடித்து, இறந்தார். விசாரணையில், சூரஜ் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், 10 ஆயிரம் ரூபாய்க்கு, பாம்பு வாங்கி, உத்ராவை கடிக்க வைத்து கொன்றது தெரியந்தது. பாம்பு விற்ற சுரேஷ் கைதான நிலையில், அவரளித்த சாட்சிப்படி, விசாரணை அனைத்தும் நிறைவுற்றது. 87 சாட்சி, 286 ஆவணங்கள் மற்றும் உத்ராவின் 40 பொருட்கள் ஆகியவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. உத்ரா கொலை வழக்கில் 5 பிரிவுகளின் கீழ் குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், தண்டனை விவரம் வரும்13 தேதி அறிவிக்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்