தீவிரவாதிகளின் தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழப்பு - ராணுவ அதிகாரி ஒருவர் மரணம் என தகவல்

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஒரு அதிகாரி உட்பட 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தீவிரவாதிகளின் தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழப்பு - ராணுவ அதிகாரி ஒருவர் மரணம் என தகவல்
x
இன்று அதிகாலை பந்திபோராவில் நடத்தப்பட்ட தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்திருந்தனர். விசாரணையில் இறந்த தீவிரவாதிக்கு அண்மையில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இந்த நிலையில், பூஞ்ச் மாவட்டம் சூரங்கோடு பகுதியில் ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைக்க, அங்கு ராணுவ வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது மறைந்திருந்த தீவிரவாதிகள்  துப்பாக்கியால் சுட, ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் அதிகாரி ஒருவர் உட்பட நான்கு வீரர்கள் உயிரிழந்தனர். இருதரப்பினரும் தாக்குதலை தொடர்வதால்  எல்லைப்பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்