குண்டும் குழியுமாக காணப்படும் சாலை - தேங்கி நிற்கும் மழை நீர், ஆனந்த குளியல் போட்டு எதிர்ப்பு

கோழிக்கோடு அருகே நபர் ஒருவர் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரில் குளித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
குண்டும் குழியுமாக காணப்படும் சாலை - தேங்கி நிற்கும் மழை நீர், ஆனந்த குளியல் போட்டு எதிர்ப்பு
x
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பாறைக்கடவு வளையம் சாலை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக  சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்பட்டுள்ளது. மழை காலங்களில் சாலையின் நடுவே தண்ணீர் தேங்கி, குளம்போல் காட்சி அளித்து வந்துள்ளது. இதுக்குறித்து பலமுறை புகார் அளித்தும் பலன் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் சாலையின் நடுவே தேங்கி நிற்கும் தண்ணீரில் நீந்தி குளித்தபடி தனது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்