ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் - கல்பவிருட்ச வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் 4ஆவது நாள் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் 4ஆவது நாள் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 7 ஆம் தேதி தொடங்கியது. 4 ஆவது நாளான இன்று கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். அப்போது அவர் கிருஷ்ணர், ருக்மணி, சத்யபாமா அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில், ஜீயர்கள் நாலாயிரத் திவ்யபிரபந்தம் பாட அர்ச்சகர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து ஆராதனை செய்தனர்.
Next Story