அமைதிக்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு

2021- ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு
x
2021- ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 
 
ஏற்கனவே மருத்துவம், இயற்பியல் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பத்திரிகையாளரான  மரியா ரெசா மற்றும் ரஷ்யாவின் டிமிட்ரி முராட்டோவ் ஆகிய இருவருக்கு, நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அமைதி, ஜனநாயகத்துக்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியதாக  இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 



Next Story

மேலும் செய்திகள்