கோரக்நாத் கோயிலில் நவராத்திரி விழா - யோகி ஆதித்யநாத் பங்கேற்பு
உத்தரபிரதேச மாநிலம், கோரக்பூரில் நடந்த நவராத்திரி திருவிழாவில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.
கோரக்பூரில் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட கோரக்நாத் மந்திர் என்ற கோவில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டத்தில், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துக் கொண்டார். அவர் தலைமையில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
Next Story