போதை விருந்து தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்து விசாரணை - போதைபொருள் தடுப்பு பிரிவு இயக்குநர்

மும்பை சொகுசு கப்பலில் போதை விருந்து நடத்தியது தொடர்பாக இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டு, 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போதை பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
போதை விருந்து தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்து விசாரணை - போதைபொருள் தடுப்பு பிரிவு இயக்குநர்
x
கடந்த 2ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் கைது செய்யப்பட்டார்.  

இந்த வழக்கில் இதுவரை நைஜீரிய இளைஞர் உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 45 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாகவும் போதைபொருள் தடுப்பு பிரிவு இயக்குநர் தெரிவித்துள்ளது.

சொகுசு கப்பல் போதை விருந்து தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதை பொருள் பயன்பாடு தொடர்பாக கடந்த ஓராண்டில் மும்பையில் மட்டும் 94 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்