வெளிநாட்டு பயணிகளுக்கு அக்.15 முதல் சுற்றுலா விசா - மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

அக்டோபர் 15 முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு புதிதாக சுற்றுலா விசா வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
வெளிநாட்டு பயணிகளுக்கு அக்.15 முதல் சுற்றுலா விசா - மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி
x
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக வெளிநாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து வித வீசாக்களும் கடந்த ஆண்டு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. மேலும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சர்வதேச விமான போக்குவரத்து இருக்கும் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்நிலையில் அக்டோபர் 15 முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு புதிதாக சுற்றுலா விசா வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் விமானங்கள் ஆகியவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்க கூடிய அனைத்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்