ஜிப்மரில் கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு என தனி பிரிவு - தன்னார்வலர்களுக்கு ஜிப்மர் நிர்வாகம் அழைப்பு

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கான தனி மருத்துவ ஆராய்ச்சி பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜிப்மரில் கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு என தனி பிரிவு - தன்னார்வலர்களுக்கு ஜிப்மர் நிர்வாகம் அழைப்பு
x
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கான தனி மருத்துவ ஆராய்ச்சி பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் உட்பட ஆறு தடுப்பூசிகளுக்கு அவசர பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தொடந்து பக்க விளைவுகளற்ற உருமாறிய கொரோனா வைரஸை எதிர்க்கும் வகையில் தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒன்றாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிக்கான பரிசோதனைகளை மேற்கொள்ள தனி ஆராய்ச்சி பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் மிஷன் கோவிட் சுரக்‌ஷா திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையில் தன்னார்வலர்கள் முன்வந்து தங்களை ஈடுபடுத்தி கொள்ளலாம் என ஜிப்மர் மருத்துவ நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்